தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விதிமீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

பெரம்பூர், ஆக.12: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பாரதிதாசன் தெருவில் உள்ள கலைச்செல்வி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டு இருப்பதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் மேற்கண்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தபோது, விதிமீறி கட்டுமானம் நடைபெற்றது தெரியவந்தது. இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி ராஜ்குமார், செயற் பொறியாளர் அரிநாத், உதவி செயற் பொறியாளர் சேகர், உதவி பொறியாளர்கள் பிரகாஷ், பாலச்சந்தர், பார்த்திபன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இதேபோல், கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் மீனாம்பாள் சாலையில் ஜாவித் முகமது என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் மற்றும் எம்கேபி நகர் மேற்கு அவன்யூ சாலையில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம், கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் இனியன் என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் ஆகியவை விதிமீறி கட்டப்பட்டது தெரியவந்ததால், அவற்றுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநகராட்சி வகுத்து கொடுத்துள்ளதாகவும், அதை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.