தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ. 11: சென்னை, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை காலை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, மர்ம இ-மெயில் வந்தது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை காலை, கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்ம இமெயில் வந்தது. இரண்டு நாட்களிலும், சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகள் நடத்தினர். ஆனால் 2 நாட்கள் வந்த இ-மெயில்களும், புரளி என்று தெரியவந்தது.

Advertisement

இந்த நிலையில் நேற்று 3வது நாளாக, ஒரே நேரத்தில், இரண்டு விமானங்களுக்கு அதை போல் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் ஏசியா விமானம், ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து, சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்களில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கியதும் குண்டுகள் வெடிக்கும் என்றும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினர், அதிரடி படை வீரர்கள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானம், மற்றும் அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகப்படும் படியான பொருட்களோ எதுவும் இல்லாததால், இது வழக்கமான புரளி தான் என்று தெரியவந்தது.

Advertisement