தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளத்தில் மூழ்கி மகன் பலியானதால் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை

சென்னை, நவ.11: கோயில் குளத்தில் மூழ்கி மகன் பலியான சோகத்தில் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அச்சிறுப்பாக்கம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. அச்சிறுப்பாக்கம் அருகே கொங்கரை மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் புருஷோத்தமன் (11), கொங்கரைமாம்பட்டில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், கொங்கரை மாம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் பின்புறம் விளையாடியபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் அஸ்தியை மாமல்லபுரம் பகுதி கடலில் கரைக்க செந்தில்குமார் சென்றுவிட்டார்.

Advertisement

இந்தநிலையில் ஒரே மகனை இழந்த தாய் ஜெயலட்சுமி (36) மனமுடைந்து கதறி அழுதபடி இருந்துள்ளார். மன அழுத்தம் அதிகமானதால் அவர் தனது மகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, 8ம் வகுப்பு படிக்கும் தனது மகள் பத்மாவதியுடன் (14) சேர்ந்து, நேற்று கரசங்கால் என்ற இடத்திற்கு ஜெயலட்சுமி சென்றுள்ளார். அங்குள்ள தண்டவாளத்தில், திருப்பதியில் இருந்து புதுச்சேரி சென்ற பயணிகள் விரைவு ரயில் வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில் முன் பாய்ந்து தாய், மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் மகளுடன் சேர்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement