தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரம் மண்டலத்தில் ரூ.1.1 கோடியில் 3 குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, நவ.11: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள ராமச்சந்திரா குளம், படவேட்டம்மன் கோயில் குளம் மற்றும் ஊத்துகுளம் குளம் ஆகிய 3 நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த குளங்கள் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் உதவும். இதற்காக மாநகராட்சி 1.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த குளங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராமச்சந்திரா குளத்தில் கடந்த ஆண்டு 1.5 கோடி ரூபாய் செலவில் கரைகளை சீரமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், கைப்பிடிகள் பொருத்துதல் போன்ற பணிகள் நடந்தன. மேலும், குழந்தைகள் விபத்தில் சிக்குவதை தடுக்கவும், குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்தவும் 40 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. குளத்தில் பராமரிப்பாளர் அறை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளும் மழைக்காலத்திற்குப் பிறகு தொடங்கும். முழுமையாக சீரமைக்கப்பட்ட பிறகு, இது அப்பகுதி மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாக மாறும்.

Advertisement

அதேபோல், மாதவரம் லட்சுமி நகரில் உள்ள ஊத்து குளத்தை தூர்வாருதல், சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பறைகள், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்துதல், பூங்கா அமைத்தல் போன்ற பணிகள் மழைக்காலத்திற்குப் பிறகு தொடங்கும். இந்த குளங்கள் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இது சென்னை மாநகரத்தின் நீர் சேகரிப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த குளங்கள் சீரமைக்கப்படுவதால், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். மேலும், இது அப்பகுதியின் அழகையும் மேம்படுத்தும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement