தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலர் நாள் கொண்டாட்டம் 200 காவலர்கள் ரத்ததானம்

சென்னை, செப்.10: காவலர் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 200 காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ரத்ததானம் வழங்கினர். முதன் முதலாக 1859ம் ஆண்டு ‘மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றிவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள், இனி ஆண்டுதோறும் ‘காவலர் நாளாக’ கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி செப்டம்பர் 6ம் தேதி முதல் காவலர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் காவல் நிலைய பிரிவினரால் கடந்த 7ம் தேதி முதல் வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம், மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகில் பொதுமக்களிடம் ‘சைபர் குற்றத்தடுப்பு’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், புதுப்பேட்டை ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமில் சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.

Advertisement

Advertisement