தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மாநகராட்சி சார்பில் உலக வீடற்றோர் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Advertisement

 

 

மாதவரம், அக்.9: உலக வீடற்றோர் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி- அரசு காப்பகங்களில் உள்ள நலன்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

சென்னை மாநகராட்சி, வடக்கு மண்டலம் சார்பில் உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதவரம் மண்டலம், ஆந்திரா பேருந்து நிலையத்தில் நடந்தது. மண்டல நல அலுவலர் தேவிகலா தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் பெரிய கருப்பன் முன்னிலை வகித்தார். இதில் ரியல் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் வீடற்றோர் நிலை குறித்தும், அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நடத்தி வரும் காப்பகங்களில் வழங்கப்படும் சேவைகள், மறுவாழ்வு பணிகள், மீண்டும் குடும்பத்தாரோடு இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள், சமூகத் திட்டங்களோடு இணைத்தல் போன்ற பணிகள் குறித்து வீதி நாடகம், பொம்மலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள், விழிப்புணர்வு நடனத்தின் மூலம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து பயணிகள், ஓட்டுநர் நடத்துநர்கள், பொதுமக்கள் ஆகியோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீடற்றோரை வீதியில் விடமாட்டோம், காப்பகம் மூலம் மறுவாழ்வு தருவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில், வடக்கு மண்டல காப்பக ஒருங்கிணைப்பாளர் மெர்லின் மற்றும் அறக்கட்டளை இயக்குநர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement