தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லாவரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

பல்லாவரம், செப். 9: பல்லாவரம் மறைமலை அடிகள் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பத்மநாபன், நல்லாசிரியர் விருது பெற்றார். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5ம்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தமிழகம் முழுவதும் 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், கடந்த 5ம்தேதி வழங்கினார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 9 ஆசிரியர்கள், இந்த நல்லாசிரியர் விருதினை பெற்றனர். இதில், பல்லாவரத்தைச் சேர்ந்த, மறைமலை அடிகள் அரசுப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பத்மநாபன் என்ற ஆசிரியருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இவர், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் நலனின் மிகுந்த அக்கறையோடு, தனது கல்விப் பணியை திறம்பட செய்திட இவ்விருது தனக்கு மிகுந்த ஊக்கமளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement