தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போலீஸ் எனக்கூறி ஏமாற்றிய நகை கடைக்காரர் கைது

தண்டையார்பேட்டை, ஆக.8: காவலர் அடையாள அட்டையை போலியாக தயாரித்த நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை போலீசார் வாகன தணிகையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அந்த நபர் போலீஸ் எனக் கூறினார். சந்தேகமடைந்த போலீசார் அவரது காவலர் அடையாள அட்டையை சோதனை செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த வினோத் சோப்ரா (48) என்பதும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க போலியாக காவலர் அடையாள அட்டையை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. சோதனையில் ஈடுபடும் போலீசாரிடம், காவலர் எனக்கூறிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து வினோத் சோப்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.