தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயிலின் நிர்வாக குளறுபடி குறித்து விசாரணை : அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.7: மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில் நிதி முறைகேடு, நிர்வாக குளறுபடி குறித்து விசாரணை நடத்த அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சொத்தை குத்தகைக்கு எடுத்த அதே பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராகவேந்திர கார்த்திக் என்பவர், குத்தகையை பதிவு செய்யுமாறு சைதாப்பேட்டை சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குத்தகையை பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, குத்தகை காலத்தை குறிப்பிடாமல் சந்தை மதிப்பைவிட குறைவாக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சைதாப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ரேணுகா என்பவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

Advertisement

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சொத்துகளை நிர்வகிப்பதில் நிர்வாக குளறுபடி உள்ளதாக அறநிலையத்துறைக்கு புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட நிதி முறைகேடு, நிர்வாக குளறுபடி புகார் தொடர்பாக கூடுதல் ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டும். இந்த கோயில் பொது கோயிலா இல்லையா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிவெடுக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

 

Advertisement