தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

சென்னை, டிச.7: தாம்பரம் பகுதியில் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமிய சிறுவர், சிறுமிகளுக்கு குர்ரான் கற்பிக்கும் ஆசிரியராக சுல்தான் அகமது (47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி மசூதியில் சிறுமி குர்ரான் படிப்பதற்காக சென்றபோது, சுல்தான் அகமது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி, சுல்தான் அகமதுவை தள்ளிவிட்டு தப்பி வந்து, தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சுல்தான் அகமது மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் மைதிலி இருதரப்பு வாதங்களை கேட்டு வாதாடினார். தொடர்ந்து வழக்கின் இறுதிகட்ட விசாரணையை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு, சுல்தான் அகமது குற்றம் புரிந்ததை உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம்வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement