தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியாசர்பாடி சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை

பெரம்பூர், டிச.3: சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வடசென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், ஒரு சில இடங்களில் தேங்கிய தண்ணீர் மிக அதிகளவில் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா சுரங்கப்பாதை பகுதியில் பெய்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்கள் மூலம் அகற்றினர். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

Advertisement

இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் வழியாக மாற்றிவிடப்பட்டது. ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி வந்தாலும் பெரம்பூர் நெடுஞ்சாலை, புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா சுரங்கப்பாதை பகுதியில் கலந்து வருகிறது. சிறு மழைக்கே இந்த பகுதியில் தண்ணீர் தேங்கிவிடும். தற்போது கனமழை பெய்துள்ளதால் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பெரம்பூர் மங்களபுரம் வழியாக பெரம்பூர் ஜமாலியா செல்லும் சிறிய சுரங்கப்பாதை முழுமையாக நிரம்பியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News