தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்மார்ட் கிளாஸ் எடுப்பதாக ரூ.35 லட்சம் மோசடி பள்ளி தாளாளருக்கு விதித்த தண்டனை உறுதி: கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.2: ஸ்மார்ட் கிளாஸ் எடுப்பதாக லட்சக்கணக்கில் மோசடி வழக்கில் தனியார் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்து ெசன்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடபழனி துரைசாமி சாலையை சேர்ந்த சிவகுமார் சாது (52) ஸ்மார்ட் கிளாஸ் நடத்தி வருகிறார். இவரிடம் கொளத்தூரை சேர்ந்த வெஸ்லி என்ற தனியார் பள்ளி ஸ்மார்ட் வகுப்பு மற்றும் பள்ளி மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தது. அதனடிப்படையில் இதையடுத்து, சிவகுமார் ரூ.35 லட்சம் வரை மேம்பாட்டு பணிகளுக்காக செலவு செய்துள்ளார். ஆனால், தனியார் பள்ளி சார்பில் எந்த செலவும் செய்யப்படவில்லை. அதேநேரம், வருமானத்தில் 40 சதவீதத்தை மட்டும் எடுத்துக்கொண்டது.

Advertisement

இதையடுத்து, தான் செலவு செய்த பணத்தை சிவகுமார் கேட்டபோது பள்ளியின் தாளாளர் சுகிர்தா வைஸ்லெட் கடந்த 2022 ஜனவரியில் ரூ.5 லட்சத்திற்கான செக்கை கொடுத்துள்ளார். அந்த பணத்தை சிவகுமார் வங்கியில் டெபாசிட் செய்தபோது கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதையடுத்து சுகிர்தா மீது சிவகுமார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 25வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சுகிர்தா வைஸ்லெட்டுக்கு 45 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிவகுமார் சார்பில் வழக்கறிஞர் பூ.வேலுமணியன் ஆஜராகி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Related News