தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயான பாதையை மறித்து கட்டிய மதில் சுவர் இடித்து அகற்றம்

அம்பத்தூர், நவ.1: அம்பத்தூர் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதில்சுவர் இடிக்கப்பட்டது. அம்பத்தூர் அருகேயுள்ள ஒரகடத்தில் சுமார் 2 ஏக்கர் மயானம் உள்ளது. இதனை, ஒரகடம் மற்றும் பானு நகர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 2 பகுதி மக்களும் இந்த மயானத்திற்கு அவரவர் பகுதிக்கு ஏற்ப இரு வழிகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த மயானத்தில், பானு நகர் பகுதி மக்கள் பயன்படுத்திய வழியை அடைத்து சுற்றுசுவர் கட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரகடம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சுற்றுச்சவரை இடித்து மீண்டும் அந்த பகுதியில் வழி அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரகடம் கிராமத்தினருக்கும், பானு நகரை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஜமீஷ் பாபு, உதவி ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் இரு தரப்பினரிடம் பேசி சமாதானம் செய்தனர். பினர், சுற்று சுவர் இடிக்கப்பட்டு பழைய நிலையில் பானு நகர் வழியாக மயானத்திற்கு செல்லும் வகையில் வழியும் அமைத்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement