தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: 5 பேர் போலீசில் சரண்

தாம்பரம், அக்.1: தாம்பரத்தில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 5 பேர் போலீசில் சரணடைந்தனர். தாம்பரம் சானடோரியம், துர்கா நகர் பிரதான சாலை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (எ) ஆத்தா வினோத் (26), ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் அருகே நாகல்கேணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஆட்டோவில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் வினோத்தை ஆட்டோவில் கடத்திச் சென்று முடிச்சூர் சாலை விஜிஎன் காலனிக்கு கொண்டு சென்று, அங்குள்ள காலி இடத்தில் வைத்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.

Advertisement

தகவலறிந்த தாம்பரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தாம்பரம் காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 5 பேர், வினோத்தை கொலை செய்ததாக கூறி சரணடைந்தனர். விசாரணையில், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) லட்டு ராஜேஷ் (26), இரும்புலியூர் பகுதியை சேர்ந்த பிரேம் (எ) கொக்கி குமார் (26), பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (27), ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24), முடிச்சூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (24) என்பது தெரியவந்தது. ராஜேஷ் மற்றும் வினோத் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement