தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஸ்அவுஸ் பகுதியில் தடையை மீறி நுழைய முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 53 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை, செப்.2: ஐஸ்அவுஸ் பகுதியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உட்பட 53 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வழிபாடு முடிந்து 5ம் நாளான நேற்று முன்தினம் சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2054 சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. அதன்படி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் மாலை கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 1997ம் ஆண்டு முதல் மசூதி அமைந்துள்ள ஜாம் பஜார் காவல் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு வரை ஊர்வலத்திற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் தடையை மீறி இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உட்பட 53 பேர் தடுப்புகளை தாண்டி விநாயகர் சிலையுடன் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைதொடர்ந்து, தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைய முயன்றதாக இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஜாம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News