தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்து தீ விபத்து 2 லாரிகள் எரிந்து நாசம்: பூந்தமல்லி அருகே பரபரப்பு

 

Advertisement

பூந்தமல்லி, ஜூலை 29: பூந்தமல்லி அருகே ரசாயனம் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 லாரிகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகளில் மூலப்பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு தின்னர் என்ற ரசாயனத்தை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தது.

அப்போது, தொழிலாளர்கள் கன்டெய்னர் லாரியில் இருந்த ரசாயன கேன்களை மற்றொரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கேன் கீழே விழுந்ததில் கன்டெய்னர் லாரி திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள்ளாக கன்டெய்னர் லாரியில் இருந்த தீ அருகே நின்றிருந்த மற்றொரு லாரியின் மீதும் பரவி எரியத் தொடங்கியது.

இதையடுத்து, லாரிகள் தீப்பிடித்து எரிவதைக் கண்ட சக ஓட்டுநர்கள், தொழிற்சாலையில் நிறுத்தி வைத்திருந்த 40க்கும் மேற்பட்ட லாரிகளை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினர். மேலும், பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 2 லாரிகளும் எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News