தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவில் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் திருட்டு; கைதான கும்பலின் கூட்டாளிகள் கைவரிசை

வெள்ளிச்சந்தை, ஜூன் 23 : நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டி ஒருவரிடம் இரண்டரை பவுன் செயின் திருடப்பட்டது. குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஷ்லாஸ். இவரது மனைவி மேரி ஏஞ்சல் (70). கடந்த 20ம்தேதி இவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்தார்.

Advertisement

பின்னர் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் செல்லும் பஸ்சில், ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மூங்கில்விளை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த சுமார் இரண்டரை பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பஸ்சை நிறுத்துமாறு கூறினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தி, பஸ் முழுவதும் தேடினர். ஆனால் செயின் கிடைக்க வில்லை. பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி மேரி ஏஞ்சலிடம் மர்ம நபர் செயினை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் மேரி ஏஞ்சல் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் நாகர்கோவிலில் ஓடும் பஸ்களில் கைவரிசை காட்டி வந்த பெண் திருட்டு கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவர்களின் கூட்டாளிகள், குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்தது. அந்த கும்பல் தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Related News