தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மத்திய பல்கலைகழக சமுதாய கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

 

Advertisement

திருவாரூர், ஏப். 10: திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவினை வலியுறுத்தி மத்திய பல்கலைகழகத்தின் சமுதாய கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நாகை தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் வருன்சோனி துவக்கி வைத்தார்.

நாட்டின் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதியானது 7 கட்டங்களாக நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் இருந்து வரும் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஓரே கட்டமாக வரும் 19ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தலை நடத்துவதற்காக தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, பணி ஓதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆணையத்தின் உத்தரவு படி 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர்ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதனை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தின் சமுதாய கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நாகை எம்.பி தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் வருன்சோனி துவக்கிவைத்தார். இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாருஸ்ரீ, எஸ்.பி ஜெயக்குமார், ஆர்.டி.ஓ சங்கீதா, தாசில்தார் செந்தில்குமார், பி.ஆர்.ஓ செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News