தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி: குன்றத்தூர் அருகே சோகம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே செல்போனிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் சுழிவலம், வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர், கடந்த சில ஆண்டுகளாக குன்றத்தூர், சுப்புலெட்சுமி நகர், ஒன்றிய காலனியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன், தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக செல்போன் சார்ஜரில் மின்கசிவு ஏற்பட்டு, பாலமுருகன் மின்சாரம் பய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
Advertisement

அவரது, அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பாலமுருகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த பாலமுருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News