செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி: குன்றத்தூர் அருகே சோகம்
Advertisement
அவரது, அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பாலமுருகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த பாலமுருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement