தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் செயலி: ஈரோடு மாநகராட்சி ஆலோசனை

 

Advertisement

ஈரோடு,ஜூலை20: ஈரோடு மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செல்போன் செயலி அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில்,நகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் மாநகராட்சியின் சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில், செல்போன் செயலி அறிமுகப்படுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ”ஈரோடு மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில், அடுத்த வாரம் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அதுகுறித்து, தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதன் மூலமாக மாநகராட்சியின் விவரங்களை தெரிந்து கொள்ளவும், தங்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறவும் \”ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்\” ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும். மாநகராட்சி தொடர்பான குறைகளையும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும்” என்றார்.

Advertisement

Related News