தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

 

Advertisement

திருப்பூர், ஜூன் 12: திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட புறநகர பகுதிகளுக்குமான நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்ல வந்தவர் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்திலேயே உறங்கியுள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் அவரது அருகில் உறங்குவது போல படுத்து அருகில் இருந்தவரின் செல்போனை திருடிச் சென்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த நபர் எழுந்து பார்த்தபோது மொபைல் போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் பார்த்தும் மொபைல் போன் கிடைக்கவில்லை.

அருகில் இருந்த கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பார்வையிட்டபோது இவரது செல்போனை ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது. வெளியூர் செல்ல வேண்டிய அவசரத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் பேருந்தில் ஏறிச் சென்றார்‌. இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News