தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோத்தகிரி-குன்னூர் சாலையில் கால்நடைகள் நடமாடுவதால் விபத்து அபாயம்

 

கோத்தகிரி, ஜூலை 2: கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டு உள்ளது. கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர், உதகை நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, காந்தி மைதானம் மற்றும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகளில் சமீப காலமாக வளர்ப்பு கால்நடைகள் சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதனால், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கால்நடைகள் குன்னூர், உதகை செல்லும் நெடுஞ்சாலையில் உலா வரும் போது இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டு உள்ளது. மேலும் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் சில நேரங்களில் கீழே விழுக்கூடிய நிலை ஏற்ப்பட்டு உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வரும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related News