தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

 

புதுக்கோட்டை, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே திமுக நிர்வாகி மகனைத் தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் வளர்மதி, திமுக வழக்கறிஞர் அணி தெற்கு மாவட்ட செயலாளர். இவரது மகன் வெங்கட் திருமாறன் என்ற வெங்கடேஷ்(32). இவர், கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார். நகரம் சன்னதி பகுதியில் சென்றபோது, இவரது காரை நிறுத்திய 4 பேர் அரிவாளால் சரமாரியாக காரை அடித்து நொறுக்கியதோடு, வெங்டேஷையும் தாக்கினர்.

காயம் அடைந்த அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டோரைக் கைது செய்யக் கோரி கீரமங்கலம் காவல் நிலையம் அருகே அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுட்டோரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை சமாதானம் செய்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்நிலையில், குடும்பப் பிரச்சினையினால் தாக்கியதாக வளர்மதியின் சகோதரரும், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான பாண்டியன் உள்ளிட்ட 13 பேர் மீது கீரமங்கலம் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related News