தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடவாக்கம் கிராமத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த, தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
Advertisement

இதில், ஒப்பந்த பணியாளர்களாக 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பாக நேற்று தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இதில், தினமும் 8 மணி நேரம் வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும், அப்படி கூடுதலாக வேலை வாங்கும் நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 7ம்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். பணியின்போது விபத்தில் இறந்த தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும். இரவுநேர பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இரவு படியாக ரூபாய் 300 வழங்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்படும் தேசிய மற்றும் பண்டிகை கால விடுப்புகளை முறையாக வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டப்படி தரமான இலவசமாக உணவு வழங்க வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் சீருடை வருடத்திற்கு இரண்டு ஜோடி வழங்க வேண்டும். தொழிலாளர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். வருடா வருடம் தொழிற்சாலை லாபத்திற்கு ஏற்றவாறு 20 சதவீதம் போனஸும், ஊக்க தொகையாக 10,000 வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு போதுமான கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெயிலில் அமர்ந்து போராடியவர்களில் 5 பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதனைகண்ட, போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News