தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரட் விலை உயர்வு:கிலோ ரூ.60க்கு விற்பனை

 

Advertisement

ஊட்டி,ஏப்.13: ஊட்டி கேரட் விலை அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி,வெள்ளை பூண்டு,முள்ளங்கி,முட்டைகோஸ்,காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.

குறிப்பாக, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ கேரட் ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில், விவசாயிகள் அறுவடை செய்வதில் தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விலை படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.70 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40 கிடைத்தாலே அதிகம் லாபம் என்ற நிலையில், தற்போது கிலோ ஒன்று ரூ.60 வரை கிடைப்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. இதனால், எல்லையில்லா மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர். வறட்சி, விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கேரட் விலை உயர்வு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Advertisement

Related News