தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண்ருட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்து: 10 மூட்டை புகையிலை பொருள் சிக்கியது

பண்ருட்டி, நவ. 13: பண்ருட்டி அருகே புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்ருட்டி -கெடிலம் சாலையில் நேற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தக் காரை ராஜஸ்தான் மாநிலம் ஜாலூரை சேர்ந்த துர்காராம் (26) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் திருவாமூர் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி ரோட்டின்அருகிலிருந்த தேக்க மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்ட ஓட்டுநரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 10 மூட்டை புகையிலை பொருட்கள்இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் புகையிலைப் பொருட்கள் கடத்தல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய தீபக் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement