தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடிமெட்டு மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் உருண்ட கார் கிரேன் மூலம் மீட்பு

 

Advertisement

போடி, ஜூலை 19: போடிமெட்டு மலைச்சாலையில் கடந்த மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில், 200 அடி பள்ளத்தில் உருண்ட கார் நேற்று, கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூரு குல்பர்காவைச் சேர்ந்தவர் சஞ்சீவி ரெட்டி(50). இவர் தனது குடும்பத்தினருடன் காரில், கடந்த மாதம் 5ம் தேதி, கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, மூணாறு வழியாக போடிக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது போடி மெட்டுச்சாலை புலியூத்து அருகே 4வது கொண்டை ஊசி வளைவில், முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சஞ்சீவி ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அம்பிகா (42), மகள் கீர்த்திகா (8), மகன் கரண்(11), உறவினர்கள் வைஷாலி (18), விஜய் (35), ஹர்சா (24) ஆகியோர் படுகாயமடைந்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மீட்கப்படாமல் இருந்த கார், குரங்கணி காவல்நிலைய போலீசாரின் உதவியோடு கிரேன் மூலம் நேற்று மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement