தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

சாயல்குடி, மே 17: கடலாடி வனப்பேச்சியம்மன் கோயில், வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. கடலாடி சமத்துவபுரம் அருகே உள்ள கொண்டையுடைய அய்யனார், வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் 15ம் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் நடைபெற்ற பெரியமாடு வண்டி போட்டியில் 7 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதலிடத்தையும், நெல்லை மாவட்டம், வேலாங்குளம் கண்ணனின் மாடுகள் 2ம் இடமும், மதுரை பரவை சின்னவேலம்மாள் மாடுகள் 3ம் இடத்தையும், எம்.கரிசல்குளம் கருப்புத்துரை மாடுகள் 4ம் இடத்தையும் பெற்றன. சின்ன மாடுகள் பிரிவில் 10 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

Advertisement

இதில் கே.வேப்பங்குளம் அரிராம் நாகஜோதி மாடுகள் முதல் இடத்தையும், எம்.கரிசல்குளம் வர்ணிகாநாச்சியார் மாடுகள் 2ம் இடத்தையும், மேல்மருதூர் முத்துப்பாண்டி மற்றும் ஜகவீரபுரம் முத்துமீனாள் மாடுகள் 3ம் இடத்தையும், மதுரை வெள்ளரிப்பட்டி பாலா மாடுகள் 4ம் இடத்தையும் பெற்றன. பூஞ்சிட்டு பந்தயத்தில் 17 வண்டிகள் பங்கேற்றதால் அதனை பிரித்து 3 உள்பிரிவு போட்டிகளாக நடத்தப்பட்டது. மூன்று பிரிவு போட்டிகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசாக பணமும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. போட்டியில் மதுரை, சிவகங்கை நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பந்தய மாடுகள், வீரர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement