தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் உயிரிழந்த சோகம் இறப்பிலும் இணை பிரியாத சகோதரர்கள் ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில்

ஒடுகத்தூர், ஜூலை 4: ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(82). இவரது அண்ணன் ஜெயராமன்(85). இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு மகன்கள், மகள்கள் உள்ளனர். இருவரது மனைவிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில், பலராமன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து அவரை பாராமரித்து வந்தனர்.

Advertisement

ஆனால், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பலராமன் உடல்நிலை மோசமாகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலை கேட்டு சோகத்தில் இருந்த அண்ணன் ஜெயராமன் தனது தம்பியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் தனது தம்பி சடலத்தின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த ஜெயராமன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது தம்பி இறந்த துக்கத்தில் இருந்த அண்ணனும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர்களின் இருவரின் சடலங்களையும் அருகருகே புதைப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒடுகத்தூர் அருகே தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் இறந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News