தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் பழுதடைந்த சோலார் விளக்குகள்

தஞ்சாவூர், டிச.7: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சோலார் விளக்குகளை சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தநாடு, கறம்பக்குடி, செல்லம்பட்டி, பாச்சூர் மருத்துவ கல்லூரி புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை பாபநாசம், நாஞ்சிக்கோட்டை வல்லம், ஆகிய ஊர்களுக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தினமும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் அலுவலகம் செல்வோர், தினசரி கூலிவேலைக்கு செல்வோர் காலை 6:00 மணி முதல் இரவு 9மணி வரை பேருந்துக்காக கூடுவர்.

Advertisement

இதனால், காலை முதல் இரவு வரை எந்த நேரமும் பரபரப்பாகவே காணப்படும். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து மார்க்கத்திலும் அமைக்கப்பட்டுள்ள சோலார் லைட்டுகள் கடந்த ஆறு மாத காலமாக எரியாமல் உள்ளன. இதனால், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், இரவு நேரத்தில் வரும் பொதுமக்கள் பேருந்துக்கு காத்திருக்க அச்சப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சோலார் விளக்குகளை சீரமைக்கவும், வயதானோர், பெண்கள், குழந்தைகள் பேருந்துக்காக காத்திருக்கப் போதுமான இருக்கை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வணிகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Advertisement

Related News