தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பனார்கோவில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரம்

செம்பனார்கோயில், ஜூன் 6: கோடை மழை பெய்து முடிந்துள்ள நிலையில் செம்பனார்கோவில் பகுதியில் செங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணியில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் தயாரிக்க கோடைகாலம் தான் ஏற்ற காலமாகும். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் செங்கல் தயாரிக்கும் பணியில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது: கோடைகாலத்தில் அதிகமானோர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணுடன், ஆற்றிலிருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்தி, அச்சுகளில் வார்த்து எடுத்து சுமார் 6 நாட்கள் வெயிலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம். செங்கற்கள் நன்கு சுட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறினர்.

Advertisement

Related News