தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்து மீட்டபோது தீயணைப்பு வீரருக்கு முத்தம் கொடுத்த சிறுவன்

கடலூர், டிச. 3: பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. இந்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் காரணமாக கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று அதிகாலை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடலூர் செமண்டலம் குறிஞ்சி நகர், பெண்ணை நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக படகுகள் மூலம் மீட்டனர்.

Advertisement

இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகரில் வெள்ள நீர் சூழ்ந்த ஒரு வீட்டில் இருந்த சிறுவனை தீயணைப்பு வீரர் ஒருவர் தூக்கி வந்து படகில் அமர வைத்தார். அப்போது அந்த சிறுவன் சந்தோஷத்தில் அந்த தீயணைப்பு வீரருக்கு முத்தம் கொடுத்தான். பதிலுக்கு அந்த தீயணைப்பு வீரரும் அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்தார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அந்த சிறுவன் கூறுகையில், எனது பெயர் சபரீஷ் பிரபு. காலை 5 மணி அளவில் எங்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர் வந்தது. இதனால் நான் எனது பெற்றோரிடம் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். ஆனால் அதற்குள் அதிக அளவில் நீர் வந்துவிட்டது. வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் மாடியில் கொண்டு சென்று வைத்து விட்டோம். தீயணைப்பு வீரர்கள் எங்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியே அழைத்து வந்துவிட்டனர். என்று கூறினான்.

 

Advertisement

Related News