தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டை காப்பாற்ற முயன்றபோது ஆற்றுக்கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி

கலசப்பாக்கம், ஜூலை 7: கலசப்பாக்கம் அருகே ஆற்றுக்கால்வாயில் தவறி விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் சோழங்குப்பம் ஊராட்சி, வெள்ளிக்குப்பம் கிராமத்தைவர் சேர்ந்த நடராஜன் மனைவி சகுந்தலா(70). இவர் தனக்கு சொந்தமான வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு நேற்று ஓட்டிச்சென்றார். அவரது பேரன் முகிலரசன்(6) என்பவரை உடன் அழைத்து சென்றார்.

Advertisement

அப்போது, மிருகண்டா நதி ஆற்றுக்கால்வாயில் வெள்ளாடு ஒன்று தவறி விழுந்தது. அதனை காப்பாற்ற சிறுவன் முகிலரசன் முயன்றபோது ஆற்றுக்கால்வாய் நீரில் மூழ்கினார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த பாட்டி சகுந்தலா கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் சிறுவன் உயிரிழந்ததால் சடலத்தை மீட்டனர். ஆட்டை உயிருடன் மீட்டனர்.

தகவல் அறிந்த ஆதமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டை காப்பாற்ற முயன்று கால்வாயில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement