தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா

தஞ்சாவூர், செப்.29: உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய விலங்கை உடைத்து நூல் அறிமுக விழா தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இலங்கையில் தமிழ் ஈழத்தில் சிங்கள இனவெறியர்களின் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையை, இனப்படுகொலையை எதிர்த்து, ஈழத் தமிழர்களுக்கு ஈழவிடுதலை உணர்வை ஏற்படுத்திய உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் சுயசரிதை நூலான விலங்கை உடைத்து நூல் அறிமுக விழா தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேராசிரியர் பாரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

Advertisement

முள்ளிவாய்கால் நிர்வாகி துரை.குபேந்திரன் முன்னிலை வகித்தார். முள்ளிவாய்க்கால் இலக்கியமுற்ற நிர்வாகி பொறியாளர் பழனிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் ராமன், தெட்சிணாமூர்த்தி, மனோகரன் ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர். விலங்கை உடைத்து நூலினை திறனாய்வு செய்து பேராசிரியர் ராமலிங்கம், வழக்கறிஞர்கள் பானுமதி, நல்லதுரை, பொறியாளர் கென்னடி ஆகியோர் திறனாய்வு செய்து உரையாற்றினார்கள்.

நூலின் ஆசிரியர் காசி ஆனந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். செல்வபாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement

Related News