தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடை கருவியுடன் ‘புளூடூத்’ இணைச்சாச்சு... ரேஷன் கடைகளில் துல்லிய எடையில் உணவு பொருட்கள்

 

Advertisement

கோவை, ஜூன் 30: கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளுக்கு மாவட்ட அளவில் பூசாரிபாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள 10 குடோன்களில் இருந்து உணவு பொருட்கள் சப்ளையாகிறது. இந்த குடோன்களில் இருந்து உணவு பொருட்களை உரிய எடையில் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும். ஆனால் ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக ரேஷன் பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்தது. கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு தானியங்கள் முறையாக வழங்காமல் முறைகேடு செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் எடை கருவியுடன் ‘புளூடூத்’ இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு உணவு பொருட்களும் தனித்தனியாக எடை போடப்பட்டு பொதுமக்களின் விரல் ரேகை பதிவுகள் பெறப்பட்டு வருகிறது. இதனால் எடை மோசடி, பொதுமக்கள் வாங்காமல் வாங்கியது போல் கணக்கு காட்டும் நடைமுறை தடுக்கப்பட்டது. அனைத்து பொதுமக்களும் உரிய எடையில் பொருட்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கிராம், ஏன் ஒரு அரிசிகூட குறையாது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவறுகளை தடுக்கும் திட்டத்தால் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement