சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்
காரைக்குடி, செப். 1: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய என்எஸ்எஸ் மற்றும் என்சிசி சார்பில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி தாளாளர் முனைவர் சேதுகுமணன் வாழ்த்தினார். முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். காரைக்குடி, தேவகோட்டை அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் ரத்தம் சேகரித்தனர். முகாமில் இணை பேராசிரியர்கள் ஜெயபிரகாஷ், கவிதா, என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் தனசேகரபாண்டியன், கோகிலா, என்சிசி ஒருங்கிணைப்பாளர் கவியரசு, உடற்கல்வி ஆசிரியர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர். 43க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
Advertisement
Advertisement