தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததானம், மரம் நடும் விழா

ஊட்டி, அக்.25: இந்திய செஞ்சிலுவை சங்கம், ஊட்டி அகில இந்திய வானொலி மற்றும் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் மரம் நடும் விழா ஊட்டியில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைமை அதிகாரி உன்னி கிருஷ்ணன் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் அவர்கள், நீலகிரி செஞ்சிலுவை சங்க தலைவர் கேப்டன் மணி, இந்திய செஞ்சிலுவை மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஹரிணி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆகியோர் முன்னிலையில் நிலையத்தில் பணிப்புரியும் பொறியாளர் பிரிவு மற்றும் அலுவலகப் ஊழியர்கள், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளர்கள், பண்பலை நேயர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு ரத்த தானம் செய்தும் மரக்கன்றுகளை நட்டனர். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை உரையாற்றி தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை திட்டங்களையும், மக்கள் நல திட்டங்களையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில இந்திய வானொலி நிலைய அலுவலர்கள் ஜான் எபினேசர், மனோகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Related News