தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கழுவன்திட்டையில் உலக கைம்பெண்கள் தின சிறப்பு மாநாடு பிஷப் பங்கேற்பு

திருவட்டார்,ஜூலை 2: உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மாநாடு கழுவன்திட்டையில் நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட சமூக பணி மையமான மிட்ஸ் நிறுவனம் சார்பில் இந்த மாநாடு நடந்தது. நிகழ்ச்சியை மிட்ஸ் இயக்குநர் அருட்தந்தை ஜெரோம் துவக்கி வைத்தார். கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்மல் மேரி, களப்பணியாளர் ஆனிலெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பில் வாழும் கைம்பெண்களுக்கு மிட்ஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், எந்த நிலையிலும் தைரியத்தை விட்டுவிடாமல் உழைத்து முன்னேற வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வோம் எனவும் ஆயர் பேசினார். தமிழக அரசு சார்பில் கைம்பெண்கள் மேம்பாட்டுத் துறை உருவாக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மினி நன்றி கூறினார். கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பங்கேற்றனர்.

Related News