தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாநகர், கோயம்பேட்டில் மீண்டும் பைக் ரேஸ் 20 வாகனங்கள் அதிரடி பறிமுதல்: போலீசார் சோதனையில் நடவடிக்கை

 

Advertisement

அண்ணாநகர், ஜூன் 16: அண்ணாநகர், கோயம்பேட்டில் மீண்டும் பைக் ரேஸ் சம்பவம் நடந்த நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறி 20 வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணாநகர், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடத்தி அவற்றை இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்தனர்.

இதையடுத்து அண்ணாநகர் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயகரன் உத்தரவின்படி, அண்ணாநகர், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நரேஷ்குமார், சுந்தரம் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் இரவு நேர பைக் ரேஸ் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. சமீப காலமாக அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் மீண்டும் இரவு நேர பைக் ரேஸ் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டி வந்தவர்கள் மற்றும் ஒரே வாகனத்தில் பயணித்த 3 பேர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை தாறுமாறாக ஒட்டி சென்றவர்களை உள்பட சுமார் 20 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தை இரும்பு தடுப்புகள் வைத்து மூடினர். மேலும், வாகன சோதனையை தீவிரமாக மேற்கொண்டனர்.

Advertisement

Related News