தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூலூர் மயிலம்பட்டியில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பீகார் வாலிபர் கைது

 

Advertisement

சூலூர், ஜூன் 18: சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், நேற்று மாலை தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனியாக வீட்டிற்கு நடந்து வந்தார். சின்னியம்பாளையம்-மயிலம்பட்டி சாலையில் வந்தபோது பேருந்து நிறுத்தத்தில் இருந்து வாலிபர் ஒருவர், இளம் பெண்ணை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த இளம்பெண், அந்த வாலிபர் தன்னை கடந்து செல்லட்டும் என சாலை ஓரமாக ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அந்த வாலிபர், திடீரென இளம் பெண்ணை கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளம் பெண் லேசாக காயமடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விசாரித்தபோது வாலிபர் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தர்மஅடி கொடுத்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பஸ்வான் (40) என்பதும், தற்போது மயிலம்பட்டியில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News