தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி மாநகர பகுதியில் 650 சிசிடிவி கேமரா பொருத்த பூமிபூஜை

தூத்துக்குடி, ஏப். 25: தூத்துக்குடியில் குற்றச்செயல்களை கண்காணிக்க 650 சிசிடிவி கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான் உத்தரவிற்கிணங்க டவுன் ஏஎஸ்பி மதன் வழிகாட்டுதலின்படி பாளை ரோட்டில் எப்சிஐ குடோன் பகுதியில் இருந்து மாநகரின் முக்கிய பகுதிகளில் குற்றச்செயல்களை கண்காணிக்க 650 இடங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை, எப்சிஐ குடோன் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் கலந்து கொண்டு சிசிடிவி கேமரா அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

Advertisement

பின்னா் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகரில் முக்கியமான அனைத்து சாலை பகுதிகளிலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இது வேறு எந்த தொடர்பிலும் இல்லாமல் தனி வழித்தடம் மூலம் 4 மாத காலத்தில் முழுமையாக நிறைவு பெறும். இதற்கென்று தனி கண்ட்ேரால் ரூம் அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும். அதில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் இலகு ரக கனரக வாகனங்கள் எவ்வளவு வந்து செல்கிறது என்பதையும் கணக்கிடப்படும். அதேபோல் 3ம் மைல் தேசிய நெடுஞ்சாலை பாலம், முத்தையாபுரம் ரவுண்டானா, மாப்பிள்ளையூரணி விலக்கு, புதூர் பாண்டியாபுரம், உள்ளிட்ட 8 இடங்களில் இதன் கண்காணிப்பு இருக்கும் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு குற்றச்செயல்கள் நடக்காத வகையில் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, செயல்படுத்தப்படும். 6 மாதத்தில் நல்ல மாற்றங்கள் இதன் மூலம் தெரிய வரும், என்றார். அப்போது உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சண்முகபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News