தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குண்டும், குழியுமான பென்னலூர் சாலை: சீரமைக்க கோரிக்கை

 

Advertisement

ஸ்ரீபெரும்புதூர், நவ.5: பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பென்னலூர் ஊராட்சியை சுற்றி ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த, தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பென்னலூர் பகுதியில் தங்கியுள்ளனர்.இதனால், இந்த ஊராட்சியில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பென்னலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையையும், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கபட்டது. தற்போது, நெடுஞ்சாலையை இணைக்கும் பென்னலூர் சாலை குண்டும், குழியுமாக மாறிய போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News