தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலத்த சூறைக்காற்றுடன் மழை பெங்களூரு விமானங்கள் சென்னையில் தரையிறங்கின

 

Advertisement

சென்னை: பெங்களூருவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத 4 விமானங்கள் சென்னையில் வந்து தரையிறங்கின. அதேபோல், மேலும் 2 விமானங்கள் திருப்பதிக்கு சென்று தரை இறங்கின. பெங்களூருவில் நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதனால் மோசமான வானிலை நிலவியதால், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அந்த விமானங்களில் 4 விமானங்கள், சென்னை விமான நிலையத்திலும், 2 விமானங்கள் திருப்பதியிலும் தரை இறங்கின. சிலிகுரியில் இருந்து 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ராஜ்கோட்டில் இருந்து 154 பயணிகளுடன பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹாங்காங்கிலிருந்து பெங்களூரு சென்ற சரக்கு விமானம் ஆகிய 4 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் நேற்று மாலை 6.20 மணியிலிருந்து 7.10 மணிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் வந்து தரையிறங்கின.

அதேபோல், 2 டெல்லி விமானங்கள், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல், திருப்பதிக்கு சென்று தரை இறங்கின. பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின்பு இந்த விமானங்கள் மீண்டும், சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து பெங்களூரு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டனர்.

Advertisement