தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் கரடி உலா

 

Advertisement

கோத்தகிரி, ஜூன் 25: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி வனப்பகுதியில் இருந்து கரடிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளன. அவ்வாறு உலா வரும் கரடிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவதோடு, சில நேரங்களில் பொதுமக்களை துரத்தி தாக்கவும் முயற்சிக்கிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் கோத்தகிரி நகர பகுதியை ஒட்டி அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் பெரிய உருவம் கொண்ட கரடி எவ்வித அச்சமும் இன்றி உணவு தேடி உலா வந்துள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இந்த சிசிடிவி கேமரா பதிவால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அடிக்கடி கரடி உலா வருவதால் பொதுமக்கள் நலன் கருதி உடனே கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News