தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் ரூ.1.38 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 10: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி சுற்றுலாத் துறை அமைச்சரால் 2024-25ம் ஆண்டு வரவு செலவு கூட்டத்தொடரில் அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், ஆர்.ஓ.பிளாண்ட், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அனைத்து இடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்பட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்கின்றனர் .இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாய பாதிரியார் தங்கசாமி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News