தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சையில் பழுதடைந்த ‘மூன்றாவது கண்’ எனப்படும் தஞ்சை அம்மா மாலைநேர காய்கறி அங்காடிக்கு அடிப்படை வசதிகள்

தஞ்சாவூர், ஆக. 27: ‘அம்மா மாலைநேர காய்கறி அங்காடி’க்கு கழிவறை, மின்சாரம், குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என ஏஐடியூசி கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் சங்க தலைவர் சேவையா தலைமையில் ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில், மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், சங்க நிர்வாகிகள் அயூப்கான், சுடலைமுத்து, வெங்கடேசன், ராஜவடிவேல், ஜெயலெட்சுமி, ஆகியோர் பங்கேற்றனர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Advertisement

கூட்டத்தில், தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் ‘அம்மா மாலைநேர காய்கறி அங்காடி’ செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி கடைகளில் ஆண்கள், பெண்கள் என நூறு பேர் வேலை செய்கின்றனர். தினந்தோறும் காய்கறி வாங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளான மின்வசதி, குடிநீர், கழிவறை வசதியின்றி தொழிலாளர்களும், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அம்மா மாலைநேர காய்கறி அங்காடியில் மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement

Related News