தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூர் அருகே வாழைத்தோட்டங்கள் தீயில் எரிந்து நாசம்

திருச்செந்தூர், மே 24: திருச்செந்தூர் அருகே வாழைத்தோட்டங்கள் தீப்பற்றி எரிந்ததில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் குலை வாழைகள் தீயில் கருகியது. திருச்செந்தூர் அருகே காயாமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட ஊத்தங்கரைவிளையில் விவசாய நிலங்களில் மின் கசிவு காரணமாக நேற்று பகலில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த 3 வாழைத்தோட்டங்களில் பரவியது. இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையிலும், சாத்தான்குளம் நிலைய அலுவலர் ஹாரிஸ் தலைமையிலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காயாமொழியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது தோட்டத்தில் தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் அருகேயிருந்த வாழை மற்றும் தோட்டத்தில் தீ பரவியது. இதில் உடன்குடி சிவன்ராஜ் என்பவரது நான்கரை ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான 4,500 குலை வாழைகள் மற்றும் பாஸ்கர் தோட்டத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 500 குலை வாழைகள் தீயில் கருகியது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Advertisement

Advertisement

Related News