பாஜவுடன் கூட்டணி வைத்ததால் சமூக நீதிக்கு எதிராக மாறிய பாமக: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
Advertisement
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது.
ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தியும், சமூக நீதி பற்றி பேசியும் வரும் பாமக தற்போது பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.
Advertisement