தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த அய்யனார் கோயில் திறப்பு

சாயல்குடி, மே 19: முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோவில் தாசில்தார் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இறைச்சிக் குளம் கிராமத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இறைச்சிகுளம் கிராமத்தில் சில பிரச்னை காரணமாக கோவிலில் மூடப்பட்டது. மேலும் அந்த கிராமத்தில் இரு தரப்பினராக செயல்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோயில் பூட்டப்பட்டிருந்தது.

Advertisement

இந்த சூழ்நிலையில் முதுகுளத்தூர் தாசில்தார் தலைமையில் பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி முன்னிலையில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில் திறந்த பின்பு சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த கோவில் திறப்பின் போது முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் துரைப் பாண்டியன், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்பு பேராயிர மூர்த்தி அய்யனாருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. கிராமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement