தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்

 

Advertisement

தஞ்சாவூர், மே 24: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் உரிமை சட்ட ஆணையர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் பொது தகவல் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

இப்பயிற்சி கூட்டத்தில், தமிழ்நாடு தகவல் உரிமை சட்ட ஆணையர் செல்வராஜ் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் உரிய காலத்தில் தகவல் அளித்திடும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக தகவல் பெறுபவரின் வரையறைகள், தகவல் பெறும் வகை முறைகள், பொது அதிகார அமைப்பின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், பொது தகவல் அலுவலர்கள் நியமித்தல் மற்றும் அதிகாரங்கள், மனுதாரர் தகவல் பெறுவதற்கான வழிமுறைகள், கோரிக்கை தீர்வு செய்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழப்பட்ட கேள்விகளுக்கு பதில் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News